0
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப் படுக்கையை அண்டிய காட்டுப் பாதையில் கடந்த சனிக்கிழமை காட்டு யானை தாக்கி 11 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்தார்.
அத்துடன், உயரிழந்த சிறுமியின் தங்கை காயமடைந்த துயரச் சம்பவமொன்று பதிவாகியிருந்தது. குறித்த சம்பவம் இடம்பெற்ற காட்டுப் பாதை மிகவும் மோசமான நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில், குறித்த வீதி பற்றைக்காடுகளால் மூடியிருந்த நிலையில் அவற்றினை முழுமையாக அகற்றி மக்களின் போக்குவரத்து பாவனைக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத் திட்டத்தில் செங்கலடி பிரதேச செயலக உத்தியேகர்தர்கள், செங்கலடி பிரதேச சபை செயலாளர், ஈரளக்குள கிராமசேவகர், ஈரளக்குள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பலர் கலந்து கொண்டதுடன் தங்களின் சேவைகளையும் வழங்கியிருந்தனர்.


Post a Comment

 
Top