0
மறைந்த ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமாகிய அமரர் ஐ.நடேசன் அவர்களின் 12வது ஆண்டு ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு ஊடக செயலமர்வு ஒன்று கல்லடி வொய்ஸ் ஒவ் மீடியா நிறுனத்தின் அனுசரணையுடன் அதன் கேட்போர் கூடத்தில் 29.05.2016 பி.ப 03.00 மணியளவில் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியரும்,முன்னாள் வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியரும்,தமிழ் தந்தி பத்திரிகையின் ஆசிரியருமான வீ.தேவராஜ் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் இத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வில் சிரேஷ்ட பத்திரிகையாசிரியர் ஒரு ஊடகவியலாளர் ஊடகப் பணியில் ஈடுபடும் போது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்,நடைமுறைகள் மற்றும் தங்களுடைய பாதுகாப்பைப் பேணுதல் சம்பந்தமான நல்ல பல விடயங்கள் பற்றி விரிவுரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செயலமர்வு சரியாக சுமார் பி.ப 05.30 மணியளவில் நிறைவுபெற்றது.




Post a Comment

 
Top