மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின்பாடுமீன் சஞ்சிகை வெளியீட்டு விழா இன்றுதிங்கட்கிழமை (21) கல்லூரியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
1991 ஆம் ஆண்டிற்குப்; பின்பு 25 ஆண்டுகள்கழித்து கல்லூரயில் கற்ற சுவாமிவிபுலானந்தரின் விபரங்கள் உள்ளிட்ட கல்லூரிபெற்ற அடைவு மட்டங்கள், கல்லூரியின்பெருமைகளை உள்ளடக்கிய மலர் வெளியீடுகல்லூரியின் அதிபர் ஆர். வெஸ்லியோ வாஸ்தலைமையில் நடைபெற்றது.
வரவேற்புரையை கல்லூரியின் பிரதி அதிபர் எஸ். மதிமோகன் நிகழ்த்தினார்.
சஞ்சிகையின் நயவுரையை கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறைத் தலைவர் திருமதி ரூபிவலன்ரினா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்எழுதி பாடசாலையின் முன்னாள் அதிபர் ஜீவன்ஜோசப் இசையமைத்த 'மீன் மகள் பாடுகின்றாள்வாவி மகள் ஆடுகின்றாள்' பாடலை ஆசிரியர் எஸ்.தேவகுமாரன் பாடினார்.
பேராசிரியர் சி. மௌனகுரு, தாழங்குடா கல்வியற்கல்லூரி பீடாதிபதி எஸ். இராஜேந்திரம், முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ்காசிநாதர்,மட்டக்களப்பு அசிரியர் கலாசாலைஅதிபர் எஸ். யோகராஜா, மண்முனை வடக்குகோட்டக் கல்வி அதிகாரி ஏ. சுகுமாரன், உதவிக்கல்விப் பணிப்பாளர் ரி. யுவராஜன், ஐ.ஓ.எம்.செயற்திட்ட அதிகாரி மேரி லம்பட் மயூரன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment