0
மண்முனை மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(21) திங்கட்கிழமை வித்தியாலய அதிபர் செ.யமுனாகரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த வருடம் இடம்பெற்ற தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் வழங்கப்பட்டது. 


மாகாணசபை உறுப்பினர் இ.துரைரெட்ணம் அனுசரணையில் குறித்த துவிச்சக்கரவண்டி கொடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாகாணசபை இ.துரைரெட்ணம், மண்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.சோமசுந்தரம் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் பெற்றார் ஆகியோர் கலந்து கொண்டனர். 


Post a Comment

 
Top