0
எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ள பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை அனுமதி பத்திரம் கிடைக்கவில்லையென்றால் 1911 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கோ அல்லது பாடசாலை பரீட்சைகள் அமைப்பு அல்லது பெறுபேறுகள் சபைக்கு தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 19ம் திகதி நாடளாவிய ரீதியில் 1217 பரீட்சை நிலையங்களில் ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 834 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top