0
பட்டிருப்பு கல்வி வயலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவெளிபாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு வைபவம் நேற்று(29.11.2016) செவ்வாய்கிழமை பி.ப.2 மணியளவில் பாலர்பாடசாலையின் அதிபர் த.விமலானந்தராஜா தலைமையில் தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.

இன் நிகழ்விற்கு பிரமதஅதிதியாக ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெதத்தினம் அவர்களும் சிறப்பு அதிதியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் வைத்தியகலாநிதி கு.சுகுணன் அவர்களும் மேலும் பல அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தலைவர் தலைமையுரையில் கடந்த 35 வருடங்களாக இயங்கி வரும் இப்பாலர் பாடசாலையானது தனக்கு என சிறுவர் சிறுவர் பூங்கால இல்லாது இருப்பது தேற்றாத்தீவு கிராமத்திற்கு துரதிஸ்ரம் என்று குறிப்பட்டதுடன் அண்மை காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவுடன் திறனை விருத்தி செய்யக் கூடிய வகையியல் அமைந்துள்ளது என்று மேலும் குறிப்பிட்டார். தலைமையுரை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் அதிதியுரை மற்றும் பரிசில்கள் வழங்கலும் இடம் பெற்றன.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

Post a Comment

 
Top