0
ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று காலை ஏறாவூர் பற்று பிரதேச செயலக கட்டட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இனைத்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் கலந்து கொண்டதுடன் மாவட்டத்தின் ஏனைய பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஏறாவூர் நகர், ஏறாவூர் பற்று உள்ளுராட்சி மன்றங்களை இணைத்ததாக அண்மையில் கொடுவாமடு பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்ட தின்மக்கழிவு முகாமைத்துவப்பிரிவின் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படாமை தொடர்பில் பாராளுமன்ற  உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் இப்பணிகள் தாமதமின்றி உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற தீர்மானமும் இக்கூட்டத்தின்போது ஏகமனதா எடுக்கப்பட்டது.





Post a Comment

 
Top