0
தம்பலகாமம் கலைக்கதிர் மன்றம் இடமாற்றம் பெற்றுச் சென்ற தம்பலகாமம் பிரதேச கலாசார உத்தியோகத்தர் வி.குணபால, மற்றும் ஓய்வு பெற்ற கிராம அலுவலகர் திருமதி சந்திரபிரபாலினி ஆகியோருக்கு சேவைநலன் பாராட்டினை நேற்று சனிக்கிழமை 2016.08.27 மாலை நடத்தியது.

பட்டிமேடு இ.கி.ச. சாரதா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில்  சேவையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பாராட்டு பத்திரம் வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் கள்ளிமேடு வெள்ளைப் பிள்ளையார் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது. தம்பலகாமம் பிரதேச சபையின் செயலாளர் ச.ஸ்ரீவிஷ்ணுஅதிதியாக கலந்து சிறப்பித்தார்.

















Post a Comment

 
Top