0
கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய மாவட்ட உதவி பணிப்பாளராக உருத்திர மூர்த்தி யுவநாதன் இன்று  மட்டக்களப்பு சந்திரா ஒழுங்கையில் உள்ள  மாவட்ட காரியாலயத்தில் இன்று தனது கடமையை பொறுப்பேற்று உள்ளார் .


இவர் முன்னால் மாகாண போக்குவரத்து அமைச்சின் மட்டக் களப்பு மாவட்ட போக்குவரத்து அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரியாகவும் , மாவட்ட முகாமையாளராகவும் , மாகாண போக்குவரத்து அதிகார சபையில் திருகோணமலை விசேட  அபிவிருத்தி த்திட்ட உதவி பணிப்பாளராக  சேவையாற்றிய இவர் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  மாவட்ட உதிவி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது .

எட்டு வருடம்  போக்குவரத்து துறையில் அனுபவம் வாய்ந்த உ .யுவநாதன் மாவட்டத்தில் போக்குவரத்து துறையின் அதிகார சபையின் பல அபிவிருத்தி திட்டங்களை மேற் கொண்டுள்ளார் .

கடந்த சில காலங்களில் வீதிப் போக்குவரத்து தொடர்பாக சாரதி நடத்தினர்களிடம் பல பிரச்னைகள் நிலவியமை பல ஊடகங்களிலும் வெளிக்கொண்டுவரப் பட்ட நிலையில் தற்போது இவர் நியமிக்கப் பட்டுள்ளார்

தனியார் பஸ் நிலையத்தை பார்வையிட்ட போது தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top