மேல்மாகாண சபை உள்ளிட்ட நாடளாவிய
ரீதியாக உள்ள நகர அபிவிருத்தி தொடர்பில், வடிவமைக்கப்பட்ட அபிவிருத்தி
திட்டம் நேற்று ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்று கட்டங்களாக
மேற்கொள்ளப்பட உள்ள இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வாகன நெரிசல்,
குப்பைகூழ பிரச்சினை, குடிசை வாசிகளின் வீட்டுப்பிரச்சினை மற்றும் குடிநீர்
மற்றும் சுகாதர பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மாநகர
சபை மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க
ரணவக்கவினால் வடிவமைக்கப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டம் நேற்று
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், எதிர்வரும்
10 வருடத்திற்குள் 30 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளை
மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment