0
விரதங்களில் மகிமைமிகு விரதமாக கொள்ளப்படும் ஸ்ரீ மகா விஷ்ணு பெருமானுடைய பரம பதம் அடையும்  சுவர்க்கவாசல் வைகுண்ட ஏகாதசி விரதமானது கிழக்கின் திருப்பதியாக  விளங்கும் வரலாற்று சிறப்புமிகு வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது. அத்தோடு விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்கள் நலன் கருதி ஆலய நிர்பாக
சபையின் ஏற்பாட்டில் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது
எனவே அனைத்து பக்தகோடி பெருமக்களும் பக்தி சிரத்தையோடு
ஆசாரசீலர்களாக ஆலயத்திற்கு வருகைதந்து எம்பெருமானுடைய பூஜை நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிப்பதோடு திருமாலின் திவ்விய தரிசனம் பெற்றேகுமாறு அனைவரையும் உளம் உவர்ந்து அழைக்கின்றோம்.
(செய்தி தமிழ்)
 


 

Post a Comment

 
Top