இலங்கையில் உள்ள ஒவ்வொரு இந்து ஆலயங்களிலும் அறநெறி பாடசாலைகளை நடாத்துவது ஒவ்வொருவரின் கட்டாய கடமையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.
அறநெறி பாடசாலையின் மூலம் எதிர்கால சமூகத்திற்கு கிடைக்க இருக்கும் நற்பண்புகள் மற்றும் தீய குணங்களை இளமையிலே எவ்வாறு அகற்றுவது போன்ற விளக்கங்களை ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேய தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கிழமையிலும் வருகின்றதான ஞாயிற்றுக் கிழமை என்பது அறநெறி பாடசாலைகளுக்குரிய விசேட நாட்களாக அமைந்திருந்தாலும் குறிப்பிட்ட ஆலயங்களில் அவற்றைக் கடைப்பிடித்து அறநெறி பாடசாலைகளை நடாத்தி வருகின்றார்கள்.
Post a Comment