0
 இலங்கை திருநாட்டில் பிரசித்தி பெற்று விளங்கும் முருகன் ஆலயங்களில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இன்று(21) காலை 06மணிக்கு ஆலய தீர்த்தக்குளத்தில் நடைபெற்றது.


மூல மூர்த்திக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பூசை ஆராதனைகள் இடம்பெற்று, சுண்ணம் இடித்தலை தொடர்ந்து மயில் மீது முருகப்பெருமானை அமரச்செய்து புண்ணிய தீர்த்தக்குளத்திலே திருவோண நட்சத்திரம் கூடிய சுபவேளையில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

இதன்போது பெரும்திரளான பக்தர்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .









Post a Comment

 
Top