மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து கிராம சேவகரை இராணுவம் தாக்கியதை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காட்டு பிரதேசங்களில் இருந்து மரங்களை வெட்டிக்கொண்டு வந்த இராணுவத்தினருக்கும் கிராம சேவகருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இராணுவத்தினர் கிராமசேவகரை தாக்கியுள்ளனர்.
இவ்வாறு கிராமசேவகர் தாக்கப்பட்டமையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment