0
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகள் நடத்துவது தொடர்பாக தீர்மானிப்பதற்கான பொறுப்பு மாகாணம் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமினால் குறித்த அதிகரிகளுக்கு இது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் காலநிலை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், தமது பாடசாலை தொடர்பாக மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களிடம் அறிவித்து அவர்களின் ஆலோசனைக்கு அமைய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

 
Top