0
வவுனியா மாவட்ட அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பி.பி.ஆர். புஸ்பகுமார  எதிர்வரும் திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

வவுனியா மாவட்ட புதிய அரச அதிபராகத் தற்போது சிறைச்சாலை ஆணையாளராகப் பதவி வகிக்கும் பி.பி.ஆர்.புஸ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரியவருகிறது.

வவுனியா மாவட்ட அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர இரத்தினபுரி மாவட்ட அரச அதிபராகக் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரியவருகிறது.

Post a Comment

 
Top