0
தற்போது பாவனையில் உள்ள மொபைல் சாதனங்கள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டவையே.
எனினும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் குறுகிய நேரத்திலேயே சார்ஜ் குறைவடைகின்றன.

இதனை கருத்தில் கொண்டு புதிய மின்கலம் ஒன்றினை கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
Lithium-air எனும் இந்த மின்கலம் தற்போது பாவனையிலுள்ள Lithium-ion மின்கலங்களை விடவும் 10 மடங்கு வினைத்திறன் உடையதாகக் காணப்படுகின்றது.

மேலும் இந்த மின்கலத்தினை சுமார் 2,000 தடைவைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும்.

Post a Comment

 
Top